search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரம்மகுமாரிகள் இளைஞர் பேரணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
    X

    பிரம்மகுமாரிகள் இளைஞர் பேரணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

    பிரம்மா குமாரிகள் இயக்கம் நடத்தும் இளைஞர் பேரணியை சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். #brammahkumaarigal #youngstersrally #chennai
    சென்னை:

    பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ‘எனது பாரதம் பொன்னான பாரதம்’ என்ற தலைப்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பேரணியில் தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்ட இயக்கத்தினர் இன்று முதல் சென்னையின் பல்வேறு இடங்களிலும், நிறுவனங்களிலும், சொற்பொழிவு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

    இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் சென்னையில் தங்களது பேரணியை துவக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று மற்றும் நாளை இந்த பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #brammahkumaarigal #youngstersrally #chennai
    Next Story
    ×