search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
    X

    சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

    சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் கூலி தொழிலாளி.

    இவரது மகள் பவித்ரா வயது (17). இவர் கணவாய்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரியாவை கல்லூரிக்கு போகவேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் பவித்ரா இருந்தார்.

    நேற்று தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உடல் கருகிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×