search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்காலத்தில் மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டகூடாது - பொது மக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்
    X

    மழைக்காலத்தில் மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டகூடாது - பொது மக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

    ஆடு, மாடுகளை மின் கம்பத்திலோ, மின்கம்ப இழுவைகளிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று மின் செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் நகர மின் செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், தாதுபாய்குட்டை கடை வீதி, பழையபேருந்து நிலையம், கோட்டை, கலெக்டர்அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய் பேட்டை, ஒரு பகுதி, முதல் அக்ரகறாரம் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரி ரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல் பட்டி, களரம் பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோவில், டவுன் ரெயில்வே ஸ்டே‌ஷன் மற்றும் நான்கு ரோடு ஒரு பகுதி, பொன்னம்மாபேட்டை கேட், தில்லைநகர், அண்ணாநகர், கொய்யாதோப்பு,தீரனூர், காந்திபுரம் காலனி, நில வாரம்பட்டி, சாமியப்பாநகர், கெஜல்நாயக்கன்பட்டி, நாட்டாமங்கலம், நாழிக்கல்பட்டி, ஜருகுமலை, நெத்திமேடு, மணியனூர், கே.பி கரடு, ஊத்துமலை, ஜி.ஆர் நகர், காஞ்சி நகர், போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க தாழ்வாக உள்ள மின் கம்பிகள், சாய்ந்த நிலையில் உள்ளமின் கம்பங்கள், பழுதடைந்த மின் கம்பங்கள், உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் போன்ற குறைகளை கண்டறிந்தால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லாமலும், தொடாமலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கவேண்டும்.

    பொதுமக்கள் ஆடு, மாடுகளை மின் கம்பத்திலோ, மின்கம்ப இழுவைகளிலோ கட்டுவதை தவிர்க்கவும் மழைக் காலங்களில் மின்மாற்றி (டிரான்ஸ் பார்மர்) மின்கம்பங்கள், மின் கம்ப இழுவைகள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை, அருகில் சென்று தொடுதல் கூடாது, விபத்துக்களை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் மின்சாரம் சம்மந்தமாக புகார்களை மின் வாரிய “வாட்ஸ் ஆப்” எண் 94458 51912-க்கு புகைப்படங்கள் மூலமாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×