என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்12 Jun 2018 8:28 AM GMT (Updated: 12 Jun 2018 8:28 AM GMT)
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூறைக்காற்று அவ்வபோது வீசும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தோவாளை, கூடலூர், பெரியார் அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 7 செ.மீ, கோவையில் 2 செ.மீ., தென்காசி மேட்டுப்பாளையத்தில் 1 செ.மீ, மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூறைக்காற்று அவ்வபோது வீசும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தோவாளை, கூடலூர், பெரியார் அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 7 செ.மீ, கோவையில் 2 செ.மீ., தென்காசி மேட்டுப்பாளையத்தில் 1 செ.மீ, மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X