என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாடானையில் நூதன முறையில் மணல் திருட்டு
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நூதன முறையில் டிராக்டரில் ஆற்றுமணல் திருடிவருகிறார்கள். அதற்கு திருவாடானை தாசில்தாரிடம் சவடு மண் அள்ளுவதற்கென்று ஏதாவது ஒரு சர்வே எண்ணை குறிப்பிட்டு அனுமதி பெறுகின்றனர்.
பின்னர் அந்த அனுமதியை வைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்று பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். அப்படி அனுமதி வைத்துக் கொண்டு சவடு மண் அள்ளும்போது வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் சவடு மண்ணாக இருந்தாலும் அள்ளக் கூடாது.
இந்தநிலையில் திருவாடானை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து சென்ற போது அடுத்தகுடி பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தார். அப்போது ஆற்று மணல் இருந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது அதற்கு சவடு மண் அள்ள அனுமதியை டிராக்டர் டிரைவரான நகரிகாத் தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (46) காண்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் திருடிய கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
டிராக்டரையும் பறிமுதல் செய்து திருவாடனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்