search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொடைக்கானலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    கொடைக்கானலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

    கொடைக்கானலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் கடந்த மாதம் உகார்த்தேநகர், செண்பகனுர் பகுதிகளில் மற்றும் தனியார் ஹோட்டலில் தங்கிருந்த சுற்றுலாப் பயணியின் அறையிலும் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள நகை, மற்றும் பணம் ஆகியவை திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது31) என்றும் இவர் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வீடுகளிலும், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் அறையில் இருந்த ரொக்கப் பணத்தையும் திருடியுள்ளார் என தெரிய வந்தது.

    போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை ரொக்கத்தை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கூட்டாளிகள் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×