என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
Byமாலை மலர்16 Jun 2018 12:50 PM GMT (Updated: 16 Jun 2018 12:50 PM GMT)
வேலூர் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுத்த ஒடுகத்தூர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மின் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட் டோர் இன்று காலை குருவ ராஜபாளையம்-ஆசனாம் பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் கிடை க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X