search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மாவின் வழியில் முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் - வி.என்.ரவி
    X

    அம்மாவின் வழியில் முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் - வி.என்.ரவி

    அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக வி.என்.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக வி.என்.ரவி எம்.எல்.ஏ.  தெரிவித்துள்ளார்.

    தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வேளச்சேரி பகுதி 178-வது வட்ட கழக செயலாளர் எம்.ஏ.மூர்த்தி தலைமையில் காவிரி உரிமையை மீடுடெடுத்த வெற்றி பொதுக்கூட்டம் வேளச்சேரியில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    210 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மாகானத்திற்கும், சென்னை மாகானத்திற்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறு 210 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவின் விடா முயற்சியால் 2011-ல் அம்மா உச்சநீதிமன்றம் சென்று 2013-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    அதற்கு பிறகும் செயல்படுத்தப்படாததால் மீண்டும் நீதிமன்றம் சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அம்மாவின் கனவை நிறைவேற்ற அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் கடுகளவு கூட காவிரி பிரச்சினைக்காக செயல்பட்டதில்லை. தமிழகம் இன்று மின்சாரம் தட்டுப்பாடின்றி மின் மிகை மாநிலமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் குடிநீருக்காக வீதி வீதியாக குடங்களுடன் அலைந்த பொதுமக்களின் துயரத்தை போக்க அம்மா புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல் பல்வேறு நல்ல திட்டங்களை அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×