search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு - தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ விசாரணை
    X

    குட்கா ஊழல் வழக்கு - தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ விசாரணை

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். #GutkhaScam
    சென்னை:

    குட்கா போன்ற பொருட்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி தங்குதடையின்றி குட்கா அனைத்து இடங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.

    இது தொர்பாக நடந்த விசாரணையில் இந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.



    இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான விசாரணையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார் என்றும், அவருக்கு குடோன் அமைக்க அனுமதி அளித்த மற்றும் அந்த குடோனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார்? என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GutkhaScam
    Next Story
    ×