என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் பேப்பர் மில் ரோட்டில் நேற்று மாலை 3 பேர் கொண்ட கும்பல் அவ்வழியே சென்ற பொதுமக்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியது. மேலும் நாங்கள் ரவுடிகள். எங்களை தட்டிக்கேட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டியது.
இதுபற்றி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கிருமாம் பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர் (19) மற்றும் அண்ணன்- தம்பிகளான உதயகுமார் (30), உதயமூர்த்தி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்