search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி- பணத்தகராறில் வி‌ஷம் குடித்தனர்
    X

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி- பணத்தகராறில் வி‌ஷம் குடித்தனர்

    திருவாலங்காடு அருகே பணத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிப்பட்டு:

    திருவாலங்காடு அடுத்த ஜெ.எஸ்.ராமாபுரத்தில் வசித்து வருபவர் சரவணன் (46). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சக்திவேல், மகள் மகாலட்சுமி. இவர்களில் சக்திவேல் 9-ம் வகுப்பும், மகாலட்சுமி 7-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு சரவணன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்கள் திடீரென குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    சரவணன், அவரது மனைவி சுதா, மகன், சக்திவேல், மகள் மகாலட்சுமி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினர்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு அரக்கோணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனைவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சரவணன், கடந்த 6 மாதத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு பணம் கொடுத்தவருக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணனின் குடும்பத்தினை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவமானம் அடைந்த சரவணன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×