search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
    X

    காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

    கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு ஏழுமலை மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் வாகன சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்த னர். அந்த காரில் 19 பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் மற்றும் 2 பெட்டிகளில் டின் பீர்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காரையும், மதுபாட்டில்கள் மற்றும் டின் பீர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான புதுச்சேரி அரியாங்குப்பம் மேரி தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 35) மற்றும் அவருடன் வந்த சிறுவாடி நகர் தெருவை சேர்ந்த தங்கராசு (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரமும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரின் மதிப்பு ரூ.10 லட்சமும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×