search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடுவூர் அருகே இளம் பெண் மாயம் - கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார்
    X

    வடுவூர் அருகே இளம் பெண் மாயம் - கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார்

    வடுவூர் அருகே இளம்பெண் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
     வடுவூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூர் வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகள் சுகல்யா(வயது 21). இவர் கல்லூரி படிப்பு முடித்து வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சுகல்யாவும், சுரேசும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் வெளிநாடு சென்று விட்டார்.

    சுகல்யாவும், சுரேசும் காதலித்ததை சுகல்யாவின் பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. சுரேஷ் வெளிநாட்டுக்கு சென்றவுடன் சுகல்யாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிநாட்டில் இருக்கும் சுரேசுக்கு தெரிந்தவுடன் அவர் தனது அக்கா கணவர் வடுவூர் வடபாதியை சேர்ந்த சுரேசிடம் இந்த பிரச்சினை குறித்து கூறினார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சுகல்யா மாயமானார். இதுகுறித்து சுகல்யாவின் தாயார் சுதா நேற்று வடுவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகளை, வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (47) கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். அதன் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகல்யாவை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×