search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஈரோட்டில் மளிகை கடையில் ரூ. 80 ஆயிரம் பணம்-கம்ப்யூட்டர்கள் கொள்ளை
    X

    ஈரோட்டில் மளிகை கடையில் ரூ. 80 ஆயிரம் பணம்-கம்ப்யூட்டர்கள் கொள்ளை

    ஈரோடு அருகே மளிகைக்கடையில் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் கம்யூட்டர்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஈஸ்வரமூர்த்தி. இவர்கள் 2 பேரும் கூட்டாக பூந்துறை ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

    அவர்கள் கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்க பணம், 3 கம்ப்யூட்டர்கள், அவற்றின் சி.பி.யூ., மானிட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடை திறக்கப்பட்டது. அப்போது கடையில் பணம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையின் பின்புறம் தகர ஷீட்டினால் ஆன மேற்கூரை உள்ளது. இதனை பொருத்தி இருந்த போல்ட்களை கழற்றியுள்ள கொள்ளையர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×