search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து மரணம்
    X

    ராஜபாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து மரணம்

    ராஜபாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பாலாஜி (வயது 16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பாலாஜிக்கு படிப்பு சரியாக வராததால் பெற்றோர் டியூசன் செல்ல வற்புறுத்தினர். ஆனால் பாலாஜிக்கு டியூசன் செல்ல மனமில்லை.

    பெற்றோர் வற்புறுத்தியதால் டியூசன் செல்வதாக கூறி பணம் வாங்கிச் சென்ற பாலாஜி, காளியம்மாள் கோவில் அருகே உள்ள ‘பம்பு செட்’ பகுதிக்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விட்டார்.

    உடல் முழுவதும் கருகிய நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×