என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்10 July 2018 4:10 PM GMT (Updated: 10 July 2018 4:10 PM GMT)
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது விருத்தாசலம் சாலையில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வேகமாக வந்தன. போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள சேஷ நதியில் சிலர் மினி லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அங்கு போலீசார் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு கும்பல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தது.
இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
மணல் ஏற்றிய நிலையில் அங்கு நின்ற ஒரு லாரியையும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது விருத்தாசலம் சாலையில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வேகமாக வந்தன. போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள சேஷ நதியில் சிலர் மினி லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அங்கு போலீசார் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு கும்பல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தது.
இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
மணல் ஏற்றிய நிலையில் அங்கு நின்ற ஒரு லாரியையும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X