என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்14 July 2018 1:08 AM IST (Updated: 14 July 2018 1:08 AM IST)
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
தேவலா (நீலகிரி) 8 சென்டி மீட்டர், வால்பாறை (கோவை) 7 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) 6 செ.மீ., பாபநாசம் (நெல்லை), பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ., பொள்ளாச்சி (கோவை) 4 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி) 3 செ.மீ., செங்கோட்டை, தென்காசி (நெல்லை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
தேவலா (நீலகிரி) 8 சென்டி மீட்டர், வால்பாறை (கோவை) 7 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) 6 செ.மீ., பாபநாசம் (நெல்லை), பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ., பொள்ளாச்சி (கோவை) 4 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி) 3 செ.மீ., செங்கோட்டை, தென்காசி (நெல்லை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X