search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    களக்காடு அருகே விபத்தில் 2 பேர் படுகாயம்
    X

    களக்காடு அருகே விபத்தில் 2 பேர் படுகாயம்

    களக்காடு அருகே காரும், பைக்கும் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவரும், ஏர்வாடி நாடார் குடியிருப்பை சேர்ந்த அர்ஜூன் (20) என்பவரும் ஒரு பைக்கில் நேற்று மாலை களக்காட்டில் இருந்து ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்.என்.பள்ளிவாசல் அருகே சென்ற போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கல்லிடைகுறிச்சி நோக்கி சென்ற காரும், பைக்கும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் பைக்கில் சென்ற அஜித்குமார், அர்ஜூன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் அஜித்குமார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அர்ஜூன் வள்ளியூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×