search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராமநாதபுரத்தில் என்ஜினீயர் வீட்டில் நகை- பொருட்கள் திருட்டு
    X

    ராமநாதபுரத்தில் என்ஜினீயர் வீட்டில் நகை- பொருட்கள் திருட்டு

    என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். #Robberycase

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 56), விழுதூர் இயற்கை எரிவாயு பிளாண்டில் என்ஜினீயராக உள்ளார்.

    கடந்த 17-ந் தேதி புருசோத்தமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். அவரது கார் டிரைவர் தினமும் வந்து கார்டனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் செல்வார்.

    நேற்று முன்தினம் வந்த கார் டிரைவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சென்னையில் உள்ள புருசோத்தமனுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள், ஒரு வைரத்தோடு, 2½ கிலோ சில்வர் பொருட்கள், 3 கைகடிகாரங்கள், எல்.இ.டி. டி.வி. என மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கேணிக்கரை போலீசில் புருசோத்தமன் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பொருட்கள் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Robberycase

    Next Story
    ×