search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் அரசு ஊழியரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்த கும்பல்
    X

    திண்டுக்கல்லில் அரசு ஊழியரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்த கும்பல்

    திண்டுக்கல்லில் அரசு ஊழியரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே அம்பாத்துரையைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்தி கணேஷ் (வயது 32). பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அம்பாத்துரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சுகாதாரப்பணிகள் அலுவலகத்துக்கு வந்து பைக்கை நிறுத்தி விட்டு பஸ் ஏறி வேலைக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பழனியில் இருந்து வேலை முடித்து விட்டு திண்டுக்கல் வந்தார். துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அம்பாத்துரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    சர்வீஸ் சாலையில் மதுரை 4 வழிச்சாலை அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் சக்திகணேசை கத்திமுனையில் வழிமறித்து மிரட்டினர். பின்பு அவரிடம் பைக்கை பறித்துக் கொண்டு துரத்திவிட்டனர்.

    அங்கிருந்து தப்பி வந்த சக்திகணேஷ் திண்டுக்கல் தாலுகா போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×