search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு அருகே  கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    பாலக்கோடு அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    பாலக்கோடு அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #Suicide
    பாப்பாரப்பட்டி:

    பாலக்கோடு அருகே உள்ள சென்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தூர்வாசன். இவருடைய மகன் முனியப்பன் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்து வைக்க கோரி பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனியப்பன் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கூ.குட்டமருதஅள்ளி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×