search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கொள்ளை
    X

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கொள்ளை

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் வாடிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மனைவி ஜெயா. இவர் ஏ.டி.எம். மையத்தில் ரூ. 6 ஆயிரம் எடுத்துள்ளார். அதனை தனது பையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு செல்ல ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்து நின்றார்.

    அப்போது பஸ் வந்ததும் ஏறினார். அந்த சமயம் பின் தொடர்ந்து வந்த மற்றொரு பெண், ஜெயா வைத்திருந்த பையை திருடி சென்று விட்டார் அதில் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஜெயா இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×