என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேம்பாலம் வழியாக செல்லாமல் கருமத்தம்பட்டி நகரம் வழியாக பஸ்களை இயக்க வேண்டும் - பயணிகள் வற்புறுத்தல்
சூலூர்:
சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் கோவை நகருக்கு வந்து செல்கிறார்கள்.
சேலம், திருப்பூர், ஈரோடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களிலேயே கருமத்தம்பட்டி செல்லும் பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக இந்த பஸ்கள் கருமத்தம்பட்டி நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியே உள்ள பாலத்தில் சென்று விடுகின்றன.
மேலும் கருமத்தம்பட்டி வழியாக சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் படிகட்டுகளில் பயணித்த படி ஆபத்தான பயணம் செய்யும் நிலை உருவாகி உள்ளது. எனவே கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கருமத்தம்பட்டியில இருந்து அதிகமான பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் கருத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் போலீசார் இல்லாததாலும் , சிக்னல் இல்லாததாலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே இங்கு சிக்னல் அமைத்து, போக்குவரத்தை சரிசெய்ய போலீசாரை நியமிக்க வேண்டும். மேலும் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும் மேம்பாலம் வழியாக இயக்காமல் நகருக்குள் இயக்கி பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்