என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணை 96 அடியை தொட்டது
Byமாலை மலர்26 July 2018 5:17 AM GMT (Updated: 26 July 2018 5:20 AM GMT)
நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.
ஈரோடு:
தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.
இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.
இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X