search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்னாங்கொம்பில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    பன்னாங்கொம்பில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மணப்பாறை: 

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் செந்தில் தீபக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், கரூர் பாராளுமன்ற பொறுப்பாளர் பார்த்திபன், கோட்ட இணைப்பொறுப்பாளர் சிவசாமி, கோட்ட அமைப்புச் செயலாளர் பெரியசாமி, மாநில  செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த் உள்ளிட்ட பலரும் கோரிக்கை குறித்து விளக்கிப்பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மதுரையில் இருந்து செல்லும் பேருந்துகள் பன்னாங்கொம்பில் நின்று செல்ல வேண்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி பள்ளிக்குழந்தைகளை அலைக்கழிக்காமல் அனைத்து பேருந்துகளிலும் ஏற்றிச் செல்ல வேண்டும், வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் குறித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். 

    முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கலா துரை நன்றி கூறினார்.
    Next Story
    ×