search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இன்று கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
    X

    திருப்பூரில் இன்று கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது

    திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.

    கண்காட்சியை மேகாலயா மாநில அம்பத்தி மாவட்ட கலெக்டர் ராம்குமார் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழா மலரை சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.

    அதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் மாநில தலைவர் தில்லை ராஜன், மாநில துணைத்தலைவர் ராகவன், மண்டல தலைவர் சாமிநாதன், தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் சங்க தலைவர் சிவன் பாலசுப்ரமணியம், கண்காட்சி தலைவர் தணிகைவேல், கண்காட்சி செயலாளர் ராஜமாணிக்கம், கண்காட்சி பொருளாளர் மோகன்ராஜ், பொறியாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந் ஆகியோர் செய்து செய்தனர்.

    இந்த கண்காட்சியில் நவீன கிச்சன், புதிய கண்டுபிடிப்பு அலங்கார வளைவு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட 136 அரங்குகள் உள்ளன. 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினமும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இன்று மாலை சிலம்பாட்டம், பரத நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
    Next Story
    ×