என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
திருமங்கலத்தில் தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் கடையில் ரூ.47 ஆயிரம் கொள்ளை
பேரையூர்:
திருமங்கலம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங் கடேஸ்வரன் (வயது 40). தே.மு.தி.க.வைச் சேர்ந்த இவர் முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் ஆவார். திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டில் வெங்க டேஸ்வரன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று வியாபாரம் முடிந் ததும் கடையை பூட்டிச் சென்று விட்டார். இன்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வெங்க டேஸ்வரன் அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கண்ணாடி கதவும் திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த ரூ.47 ஆயிரம் கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங் கள் சேகரிக்கப்பட் டன. துப்பறியும் நாயும் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
நகரின் முக்கிய பகுதியில் உள்ள கடையை உடைத்து கொள்ளை சம்பவம் நடந் திருப்பது அந்தப்பகுதி மக்க ளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்