search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருமங்கலத்தில் தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் கடையில் ரூ.47 ஆயிரம் கொள்ளை
    X

    திருமங்கலத்தில் தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் கடையில் ரூ.47 ஆயிரம் கொள்ளை

    திருமங்கலத்தில் தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் பலசரக்கு கடையில் கதவை உடைத்து ரூ.47 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங் கடேஸ்வரன் (வயது 40). தே.மு.தி.க.வைச் சேர்ந்த இவர் முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் ஆவார். திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டில் வெங்க டேஸ்வரன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று வியாபாரம் முடிந் ததும் கடையை பூட்டிச் சென்று விட்டார். இன்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வெங்க டேஸ்வரன் அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கண்ணாடி கதவும் திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த ரூ.47 ஆயிரம் கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங் கள் சேகரிக்கப்பட் டன. துப்பறியும் நாயும் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    நகரின் முக்கிய பகுதியில் உள்ள கடையை உடைத்து கொள்ளை சம்பவம் நடந் திருப்பது அந்தப்பகுதி மக்க ளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×