என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி நன்றாக உள்ளார், தைரியமாக இருங்கள் - தொண்டர்களுக்கு கனிமொழி வேண்டுகோள்
Byமாலை மலர்30 July 2018 3:25 AM GMT (Updated: 30 July 2018 3:40 AM GMT)
கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக கனிமொழி எம்.பி.யும் கூறியுள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனறும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi
திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறை தகவல்கள் பரவத் தொடங்கியதால் காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார். லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேட்டி அளித்த ஆ.ராசா ‘கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனறும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X