என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளை
Byமாலை மலர்30 July 2018 7:28 AM GMT (Updated: 30 July 2018 7:28 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Robberycase
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே பாலப்பன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சேவை மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக வந்து செல்கின்றனர்.
சம்பவத்தன்று வேலை நேரம் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த 2 கணினி, உதிரி பாகங்கள் மின் மோட்டார் கம்பிகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து செயல் அலுவலர் செல்வம் அளித்த புகாரின் பேரில் கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X