search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அரசு பள்ளியை சேதப்படுத்திய பொதுப்பணிதுறை அலுவலர் உள்பட 5 பேர் கைது
    X

    அரசு பள்ளியை சேதப்படுத்திய பொதுப்பணிதுறை அலுவலர் உள்பட 5 பேர் கைது

    தஞ்சை அருகே ஆலக்குடி மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளியை சேதப்படுத்திய பொதுப்பணித்துறை அலுவலர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே ஆலக்குடி மெயின் ரோட்டில் அரசு பள்ளி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இப்பள்ளியில் ஆண்டுதோறும் கபாடி போட்டி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு கபாடி போட்டி நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனை மீறி அப்பகுதியினர் சிலர் அரசு பள்ளி வளாகத்தில் கபாடி போட்டியை நடத்தி உள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளி கட்டிட ஓடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் அரசு பள்ளியை சேதப்படுத்தியது மற்றும் அனுமதியின்றி போட்டி நடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் பொதுப்பணித்துறை அலுவலரான பழனிசாமி(50), வெங்கடேசன்(20), விக்னேஷ்(26), கார்த்திக்(21), தங்கமுத்து(32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×