search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு- தி.மு.க. பிரமுகர்கள் மேலும் 2 பேர் மாரடைப்பால் மரணம்
    X

    கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு- தி.மு.க. பிரமுகர்கள் மேலும் 2 பேர் மாரடைப்பால் மரணம்

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களால் பிரமுகர்கள் 2 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சபரி நாதன்(வயது 54).

    தி.மு.க.வை சேர்ந்த இவர் பாப்பான்குளம் 5-வது வார்டு துணை செயலாளராக இருந்து வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறித்து சக தொண்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனால் மனவேதனையில் இருந்த சபரிகிரிநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஊட்டி அருகே பரமூலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). தி.மு.க. கிளை பிரதிநிதி. கருணாநிதி உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களால் மனவருத்தத்தில் இருந்தார்.

    இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அம்சகுமார்(65) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×