search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேங்கடத்தில் போலீசார் தாக்கியதாக கூறி தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    திருவேங்கடத்தில் போலீசார் தாக்கியதாக கூறி தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

    திருவேங்கடத்தில் போலீஸ் நிலையத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்ற தொழிலாளியை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வழக்கு விசாரணைக்காக திருவேங்கடம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வெகு நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்த போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதாக கூறி ஜெயராஜ் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×