என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை தாக்கி நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்31 July 2018 10:16 AM GMT (Updated: 31 July 2018 10:16 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது60) விவசாயி. இவரது மனைவி சரோஜா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்கு சென்று விட்டார்.
பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பழனிச்சாமியை கடுமையாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இடைய கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது60) விவசாயி. இவரது மனைவி சரோஜா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்கு சென்று விட்டார்.
பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பழனிச்சாமியை கடுமையாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இடைய கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X