என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே மோதல்- ஆட்டோ டிரைவர், தொழிலாளி மீது வழக்கு
Byமாலை மலர்31 July 2018 11:31 AM GMT (Updated: 31 July 2018 11:31 AM GMT)
சங்கரன்கோவில் அருகே வீட்டின் அருகில் கட்டி போட்ட நாயை தாக்கிய சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர், தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது தாய் வெள்ளத்தாய் நாய் வளர்த்து வருகிறார். இதை வீட்டின் அருகில் கட்டி போட்டு இருப்பாராம்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி பரமசிவம் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளத்தாயின் வீட்டின் முன்பு கட்டியிருந்த நாய் அவரை பார்த்து குரைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம் அருகில் கிடந்த கம்பை எடுத்து நாயை அடித்துள்ளார். இது பற்றி வெள்ளத்தாய் தங்கத்துரையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தங்கத்துரை, பரமசிவத்திடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக தங்கத்துரை கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் மீதும், பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் தங்கத்துரை மீதும் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது தாய் வெள்ளத்தாய் நாய் வளர்த்து வருகிறார். இதை வீட்டின் அருகில் கட்டி போட்டு இருப்பாராம்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி பரமசிவம் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளத்தாயின் வீட்டின் முன்பு கட்டியிருந்த நாய் அவரை பார்த்து குரைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம் அருகில் கிடந்த கம்பை எடுத்து நாயை அடித்துள்ளார். இது பற்றி வெள்ளத்தாய் தங்கத்துரையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தங்கத்துரை, பரமசிவத்திடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக தங்கத்துரை கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் மீதும், பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் தங்கத்துரை மீதும் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X