என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளத்தில் உரமூட்டைக்குள் பதுக்கி கேரளாவுக்கு புகையிலை பொருட்கள் கடத்தல்
Byமாலை மலர்31 July 2018 4:18 PM GMT (Updated: 31 July 2018 4:18 PM GMT)
ஆலங்குளத்தில் இருந்து கேரளாவுக்கு உரமூட்டைக்குள் பதுக்கி கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பான்மசால, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). நேற்று இவர் மினி லாரியில் ஆலங்குளத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டினார்.
லாரி தமிழ்நாடு எல்லையை தாண்டி, கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியில் சென்றது. அப்போது அங்குள்ள சோதனை சாவடியில் கேரள போலீசார் மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உர மூட்டைகளின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளை போலீசார் சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்களாக பான் மசாலா, குட்கா பொருட்கள் இருந்தன.
இவற்றை உரமூட்டை போல கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசால, குட்கா ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக ஆரியங்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). நேற்று இவர் மினி லாரியில் ஆலங்குளத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டினார்.
லாரி தமிழ்நாடு எல்லையை தாண்டி, கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியில் சென்றது. அப்போது அங்குள்ள சோதனை சாவடியில் கேரள போலீசார் மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உர மூட்டைகளின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளை போலீசார் சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்களாக பான் மசாலா, குட்கா பொருட்கள் இருந்தன.
இவற்றை உரமூட்டை போல கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசால, குட்கா ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக ஆரியங்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X