search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுமை திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்- திருப்பூர் கலெக்டர் பேச்சு
    X

    ஆளுமை திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்- திருப்பூர் கலெக்டர் பேச்சு

    மாணவிகள் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனிசாமி பேசினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் கல்வி பயின்று இன்று தமிழ்நாட்டை கடந்து உலகளவில் பல்வேறு நாடுகளில் உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர். இன்றைய நவீன சூழலில் மாணவ, மாணவியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடையே பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பகிர்தலை குறைத்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் தங்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் நல்ல ஆலோசனைகளை உள்வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும், அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதோடு இந்திய ஆட்சிப்பணி மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற அனைத்து போட்டி தேர்வினையும் எதிர்கொள்ள நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    எனவே, இன்று புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட மாணவிகளாகிய நீங்கள் உங்கள் ஆளுமைத் திறனை வளர்த்து தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பு, விடா முயற்சியுடன் வாழ்வை எதிர்கொண்டு நல்ல பணியில் சேர்ந்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், எஸ்.வி.ஜி. விசாலாட்சி கல்லூயின் செயலாளர் திரவீந்திரன், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, உடுமலை வட்டாட்சியர் தங்கவேல், நந்தினி ரவீந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×