search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர்
    X

    சேலத்தில் கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர்

    சேலத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள மாங்குப்பையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23). டிரைவர். பழையூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (19). பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் இன்று சித்திரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி இளைஞரணி தலைவர் சுப்பிரமணி உடனிருந்தார்.

    Next Story
    ×