search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    கோவையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    கோவையில் காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 20). டிப்ளமோ பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியை சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரியில் இருந்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவி அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×