search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி
    X

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி

    மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை கே.புதூர் கணேசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பூபதிராஜா தல்லா குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவர், கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×