search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மறைவு- 4 தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சியில் உயிரிழப்பு
    X

    கருணாநிதி மறைவு- 4 தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சியில் உயிரிழப்பு

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அதிர்ச்சியில் 4 தொண்டர்கள் உயிரிழந்தனர். #KalaignarDeath #Karunanidhi #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்துள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று மாலை டி.வி.யில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க.வினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த செய்தியால் கடந்த 2 நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

    நேற்று கருணாநிதி மரணம் குறித்த செய்தி வந்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியடைந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிகாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். டெய்லர் வேலை பார்த்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் கருணாநிதியின் மரணம் குறித்த செய்தியை கேட்டதும் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனுக்கு மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் தர்மக்கொடி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மறைந்தார் என்பதை அறிந்து மாரடைப்பால் இறந்து போனார். #KalaignarDeath #Karunanidhi #DMK
    Next Story
    ×