search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது தொண்டர் மரணம்
    X

    கொடைக்கானல் அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது தொண்டர் மரணம்

    கொடைக்கானல் அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது தொண்டர் உயிரிழந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கைகாட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 62). இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முதல் மகள் வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளை செய்து வந்தார்.

    தி.மு.க. அபிமானியான இவர் நேற்று கருணாநிதி இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்து அங்கு கருணாநிதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அதே இடத்தில் மொட்டை போட்டு விட்டு அருகில் இருந்த ஏரியில் குளிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே சோகத்தில் இருந்த அப்பகுதியினர் ஜெயசீலன் மறைவால் மேலும் சோகமடைந்தனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×