search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் பலி
    X

    கருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் பலி

    சென்னிமலை அருகே கருணாநிதியின் இறுதி சடங்கை பார்த்த திமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.#RIPKarunanidhi #Karunanidhi #DMK
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஓட்டப்பாறை, திரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). பனியன் கம்பெனி தொழிலாளி.

    கரூர் அருகே உள்ள வெங்கமேடு இவரது சொந்த ஊர் ஆகும். அங்கிருந்து இங்கு வந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்தது முதல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து வந்தார். நேற்று மாலையில் கருணாநிதி இறுதி ஊர்வலம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.

    மாலை 6 மணி அளவில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் அவர் வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு பானுமதி என்ற மனைவியும், சவுமியா (17) என்ற மகளும், பிரகாஷ் (14) என்ற மகனும் உள்ளனர். சவுமியா 12-ம் வகுப்பும், பிரகாஷ் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×