என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே வீட்டு பூட்டை உடைத்து தங்கம்-வெள்ளி நகை கொள்ளை
Byமாலை மலர்9 Aug 2018 10:38 AM GMT (Updated: 9 Aug 2018 10:38 AM GMT)
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே வீட்டு பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் மேலும் 3 வீடுகளில் திருட முயற்சி செய்தனர்.
திருச்சி:
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடிதெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கண்ணன் (வயது 38).
இவர் கம்பரசம்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் மற்றும் பணிக்கு கண்ணன் சென்று விட்டனர். கண்ணனின் மனைவி தனியாக இருக்க பயந்து வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.
இதை அறிந்த மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளைபோன தங்கம் மற்றும் வெள்ளி நகை, பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கொள்ளிடம் நெ.1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கண்ணனின் வீடுபூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் கொள்ளைபோன வீட்டின் அருகே உள்ள 3 வீடுகளில் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்று உள்ளனர் என தெரிய வந்தது.
இது குறித்து கொள்ளிடம் நெ.1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடிதெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கண்ணன் (வயது 38).
இவர் கம்பரசம்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் மற்றும் பணிக்கு கண்ணன் சென்று விட்டனர். கண்ணனின் மனைவி தனியாக இருக்க பயந்து வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.
இதை அறிந்த மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளைபோன தங்கம் மற்றும் வெள்ளி நகை, பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கொள்ளிடம் நெ.1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கண்ணனின் வீடுபூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் கொள்ளைபோன வீட்டின் அருகே உள்ள 3 வீடுகளில் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்று உள்ளனர் என தெரிய வந்தது.
இது குறித்து கொள்ளிடம் நெ.1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X