search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.குப்பம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
    X

    கே.வி.குப்பம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

    கே.வி.குப்பம் அருகே நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி (வயது45). விவசாயி. இவரது சித்தப்பா மகன் ஜெயராமன் (40). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விராதம் இருந்தது.

    நேற்று மாலை தளபதி அங்குள்ள ஏரிக்கரையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயராமனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் தளபதியை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்து, முகத்தில் தளபதி படுகாயம் அடைந் தார். கே.வி.குப்பம் போலீசார் தளபதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் சி.எம்.சி.யில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.

    Next Story
    ×