என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலைமறியல்- பஸ்கள் சிறைபிடிப்பு
Byமாலை மலர்18 Aug 2018 6:13 AM GMT (Updated: 18 Aug 2018 6:13 AM GMT)
பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே கம்மார்பாளையம் பஞ்சாயத்து உள்ளது.
இங்குள்ள இருளர் காலனி பகுதிக்கு தேவராஞ்சேரி ஆற்றின் கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. எனவே பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து பெரும்பேடு பகுதியில் குடிதண்ணீர் பிடித்து வந்தனர். பலமுறை ஊராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் பொன்னேரி பெரும்பேடு சாலை கம்மார் பாளையத்தில் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பொன்னேரி பெரும்பேடு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, வெளியூர் செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரியை வரச்சொல்லி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
பொன்னேரி அருகே கம்மார்பாளையம் பஞ்சாயத்து உள்ளது.
இங்குள்ள இருளர் காலனி பகுதிக்கு தேவராஞ்சேரி ஆற்றின் கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. எனவே பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து பெரும்பேடு பகுதியில் குடிதண்ணீர் பிடித்து வந்தனர். பலமுறை ஊராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் பொன்னேரி பெரும்பேடு சாலை கம்மார் பாளையத்தில் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பொன்னேரி பெரும்பேடு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, வெளியூர் செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரியை வரச்சொல்லி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X