search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
    X

    திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

    திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. தற்போது பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்காக நெல் மூட்டைகளை ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 960 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக திருவாரூர் கிடாரங்கொண்டான் சேமிப்பு கிடங்கில் இருந்து 500 டன், நட்டுவாக்குடியில் இருந்து 200 டன். தண்டலையில் இருந்து 200 டன், நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 60 டன் என மொத்தம் 960 டன் நெல் மூட்டைகள் 80 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயிலில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 
    Next Story
    ×