என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே 3 குழந்தைகளுடன் தாய் கடத்தல்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 Aug 2018 10:01 AM GMT (Updated: 21 Aug 2018 10:01 AM GMT)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே 3 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வாய்மேடு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது38). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கமலேஷ், ஹரீஸ், பிரியதர்சினி ஆகிய 3 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சாந்தி தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பு வானோடை மேலக் காடு கிராமத்தை உள்ள தனது தாய் மாமன் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் சாந்தி மாயமானார்.
இதனையடுத்து சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ராஜேந்திரன், மாயமான சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் கண்டு பிடித்து தருமாறு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜாம்பு வானோடை கொல்லக்காடு பகுதியை சேர்ந்த வீரையன் மகன் கார்த்தி என்பவர் 3 குழந்தைகளுடன் சாந்தியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வாய்மேடு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது38). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கமலேஷ், ஹரீஸ், பிரியதர்சினி ஆகிய 3 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சாந்தி தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பு வானோடை மேலக் காடு கிராமத்தை உள்ள தனது தாய் மாமன் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் சாந்தி மாயமானார்.
இதனையடுத்து சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ராஜேந்திரன், மாயமான சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் கண்டு பிடித்து தருமாறு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜாம்பு வானோடை கொல்லக்காடு பகுதியை சேர்ந்த வீரையன் மகன் கார்த்தி என்பவர் 3 குழந்தைகளுடன் சாந்தியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X