search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
    வாணியம்பாடி:

    தென் பெண்ணை- பாலாற்றை இணைக்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநாடு வாணியம்பாடியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் தனபால் தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு, தென் பெண்ணையும், பாலாற்றையும் இணைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜீவாதாரமான தண்ணீரில் முக்கிய பங்கு வகிப்பது பாலாறு. இதன் நீர், 5 மாவட்டங்களில் குடிநீர், விவசாயம், ஆலை பணிக்கு பயன்படுகிறது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் உள்ளது. எனவே தென் பெண்ணையுடன் பாலாற்றை இணைக்க கோரினோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் கடலில் வீணாக தென் பெண்ணை நீர் கலக்கிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்திருந்தால் பாலாற்றில் தண்ணீர் இருந்திருக்கும். தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் 39 லட்சம் மக்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் மக்களும், காஞ்சிபுரத்தில் 39 லட்சம் பேரும், மற்றும் கால்நடைகளும் பயன் பெற்றிருக்கும். மத்திய அரசு ரூ.650 கோடியில் தென்பெண்ணை- பாலாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களின் நீராதாரத்தை பெருக்கும் வகையில், இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×