என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வக்கீல் மீது தாக்குதல்- மற்றொரு வக்கீலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
Byமாலை மலர்22 Aug 2018 11:42 AM GMT (Updated: 22 Aug 2018 11:42 AM GMT)
வக்கீல் மீது தாக்குதல் நடத்தியது குறித்த வழக்கில் மற்றொரு வக்கீலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 27) வக்கீல். இவர் 20-5-2004 அன்று விபத்தில் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோப்புக்கொல்லையை சேர்ந்தவர்களை பார்த்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரை கடலூர் வக்கீல் சந்திரசேகரன் வழிமறித்து திட்டி மிரட்டியதாகவும், இதை தடுக்க முயன்ற தோப்புக்கொல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கையில் பேனா கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வக்கீல் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து, அவர் மீது கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அன்வர் சதாத் தீர்ப்பளித்தார். #tamilnews
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 27) வக்கீல். இவர் 20-5-2004 அன்று விபத்தில் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோப்புக்கொல்லையை சேர்ந்தவர்களை பார்த்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரை கடலூர் வக்கீல் சந்திரசேகரன் வழிமறித்து திட்டி மிரட்டியதாகவும், இதை தடுக்க முயன்ற தோப்புக்கொல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கையில் பேனா கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வக்கீல் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து, அவர் மீது கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அன்வர் சதாத் தீர்ப்பளித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X