என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையநல்லூர் நகராட்சியில் முறைகேடு- உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் காங்கிரஸ் புகார்
Byமாலை மலர்23 Aug 2018 11:48 AM GMT (Updated: 23 Aug 2018 11:48 AM GMT)
கடையநல்லூர் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
தமிழக பட்டதாரி காங்கிரசின் துணைத் தலைவரும்,நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவருமான அப்துல்காதர் தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மக்கள் மேம்பாட்டிற்காக நகராட்சிகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒளிவு மறைவின்றி நகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து வெளியிடவேண்டிய கடமையாகும். மக்கள் நலனுக்காக திட்டம் மற்றும் தீர்மானங்கள் குறித்து தகவலறியும் வகையில் நகராட்சி நிர்வாக இணையதளம், அறிவிப்பு பலகை ஆகியவைகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கடையநல்லூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஏதும் முறையாக இணையதளம் மூலமாகவோ அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரிவிக்காமலிருந்து வந்தது. இது குறித்து தமிழ்நாடு தகவலறியும் உரிமைச்சட்டம் கீழ் தகவல் கேட்டு விண்ணபித்திருந்தேன். ஆனால் நகராட்சி நிர்வாகம் தட்டிகழிக்கும் வகையில் மனுவில் எனது கையெழுத்து சரியில்லை என நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில் ஒரு தீர்மானத்திற்கு ரூ.100 வீதம் 437 தீர்மானங்களுக்கு ரூ.43ஆயிரத்து 700 ரூபாய் கட்ட அறிவுறுத்தியது. நகராட்சி நிர்வாகம் தானே முன்வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிர்வாக தகவல்களை எங்கே நிர்வாக சீர்கேடுகள் தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தீர்மான நகல்களை வழங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பட்டதாரி காங்கிரசின் துணைத் தலைவரும்,நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவருமான அப்துல்காதர் தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மக்கள் மேம்பாட்டிற்காக நகராட்சிகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒளிவு மறைவின்றி நகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து வெளியிடவேண்டிய கடமையாகும். மக்கள் நலனுக்காக திட்டம் மற்றும் தீர்மானங்கள் குறித்து தகவலறியும் வகையில் நகராட்சி நிர்வாக இணையதளம், அறிவிப்பு பலகை ஆகியவைகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கடையநல்லூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஏதும் முறையாக இணையதளம் மூலமாகவோ அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரிவிக்காமலிருந்து வந்தது. இது குறித்து தமிழ்நாடு தகவலறியும் உரிமைச்சட்டம் கீழ் தகவல் கேட்டு விண்ணபித்திருந்தேன். ஆனால் நகராட்சி நிர்வாகம் தட்டிகழிக்கும் வகையில் மனுவில் எனது கையெழுத்து சரியில்லை என நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில் ஒரு தீர்மானத்திற்கு ரூ.100 வீதம் 437 தீர்மானங்களுக்கு ரூ.43ஆயிரத்து 700 ரூபாய் கட்ட அறிவுறுத்தியது. நகராட்சி நிர்வாகம் தானே முன்வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிர்வாக தகவல்களை எங்கே நிர்வாக சீர்கேடுகள் தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தீர்மான நகல்களை வழங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X